கோவையில் அதிமுக ஆட்சியின் போது பல கோடி செலவில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டது. 40 முதல் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததால், பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
அதோடு, இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பைபாஸ் சாலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மீட்டெடுக்கும் விதமாக, அரசியல் சார்பற்ற, ‘வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு’ என்ற அமைப்பை அப்பகுதி மக்கள் உருவாக்கியுள்ளனர். வெள்ளலூர் பேருந்து கட்டுமான பணிகளை விரைந்து துவக்க தமிழக அரசிடம் வலியுறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குப்பைகளை சேகரிப்பதில் கோவை மாநகராட்சி வார்டுகளை 5 மண்டலங்களாக பிரிக்க வேண்டும், ஒரு மண்டல குப்பைகளை மட்டும் வெள்ளலூர் குப்பை கிடங்களில் கொட்ட அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டுவதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் சீர்கேடு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி வருவதாக தெரிவித்த ஒருங்கிணைப்பாளர்கள், துடியலூர் மற்றும சரவணப்பட்டியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை, அந்தந்தப் பகுதிகளிலேயே கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.