கோவையில் அதிமுக ஆட்சியின் போது பல கோடி செலவில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டது. 40 முதல் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததால், பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
அதோடு, இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பைபாஸ் சாலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மீட்டெடுக்கும் விதமாக, அரசியல் சார்பற்ற, ‘வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு’ என்ற அமைப்பை அப்பகுதி மக்கள் உருவாக்கியுள்ளனர். வெள்ளலூர் பேருந்து கட்டுமான பணிகளை விரைந்து துவக்க தமிழக அரசிடம் வலியுறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குப்பைகளை சேகரிப்பதில் கோவை மாநகராட்சி வார்டுகளை 5 மண்டலங்களாக பிரிக்க வேண்டும், ஒரு மண்டல குப்பைகளை மட்டும் வெள்ளலூர் குப்பை கிடங்களில் கொட்ட அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டுவதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் சீர்கேடு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி வருவதாக தெரிவித்த ஒருங்கிணைப்பாளர்கள், துடியலூர் மற்றும சரவணப்பட்டியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை, அந்தந்தப் பகுதிகளிலேயே கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.