நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் என்ற தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த குழு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி செம்மலை, ஆர் பி உதயகுமார் ஓ எஸ் மணியன் வைகை செல்வன் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விவசாய பிரதிநிதிகள், தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களிடம் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், கூறியிருப்பதாவது :- கோவை தெற்கு பகுதியில் கடந்த 20.01.20 அன்று ஒருங்கிணைந்த வெள்ளலூர் பேருந்து நிலையம் சுமார் 168 கோடி திட்டமதிப்பீட்டில் துவக்கப்பட்டு சுமார் 58 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், திடீரென்று 10.02.22 அன்று கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையம் இங்கு அமைந்தால் இங்கு வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆனால், இதைப்பற்றி விளக்கம் கேட்ட போது வங்கியின் கடன்ற பெறாததும் மற்றும் அரசிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்கள். ஆனால், இன்றைய தேதி வரை கட்டுமானப் பணிகள் துவங்கப்படவில்லை.
ஆகவே, கோவை தெற்கு பகுதி மேம்படவும், அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கோவை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைத்திட உடனடியாக துவக்க தமிழக அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
This website uses cookies.