வேலூர் : குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான பெண் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றிய உமா மகேஷ்வரி என்பவர் கடந்த 2018-19ம் ஆண்டுகளில் இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பே புகார் எழுந்தது.
அப்போது, அது செய்தி வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. அந்த புகாரின் பேரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் மத்திய கூட்டுறவு வங்கி குடியாத்தம் கிளையில் ஆய்வு செய்தனர்.
இதில், 2018-19-ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 97 லட்சம் கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையில், கிளை மேலாளர் உமாமகேஸ்வரி இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, அளித்த புகாரின்பேரில், வேலூர் வணிக குற்றப் பிரிவு போலீசார் வழக் குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்பு அவரை செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், உமாமகேஸ்வரி பணியிடை செய்யப்பட்டார் நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில் உமாமகேஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், உமா மகேஸ்வரியை பணி நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு பொது மேலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வங்கி தொடர்பாக பொதுமக்கள் யாரும் உமாமகேஸ்வரியிடம் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும், மீறி தொடர்பு கொண்டு பணத்தை இழந்தால் வங்கி பொறுப்பாகாது என தெரிவித்துள்ளதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.