கோழி தீவனம் வாங்க வந்தவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பல், மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பனமடங்கி பகுதியை சேர்ந்த கோழி பண்ணை உரிமையாளர் சுரேஷ் (25) என்பவர் கோழி பண்ணைக்கு தீவனம் வாங்குவதற்காக நேற்று இரவு வேலூருக்கு சரக்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
அப்போது கொணவட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சுரேஷை வழிமறித்து கடத்தி கத்தியை காட்டி மிரட்டி இரண்டு லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
பின்னர் பணம் கொண்டுவர சொல்லி சுரேஷ் தனது குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளர்.தகவல் அறிந்து வந்த சுரேஷின் குடும்பத்தார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட கொணவட்டம் பகுதியை சேர்ந்த பாஷா, ரியாஸ், சித்திக் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முனீர், நரேஷ் உள்படட 3 பேரை ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
This website uses cookies.