வேலூர் : ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வேலூர் மாவட்டம் வழியாக கடத்தப்படுவதை தடுக்க, இரவிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநில எல்லையில் திடீர் சோதனை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் வேலூர் ஆந்திர எல்லையில் காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான் பேட்டை என்ற தமிழக எல்லை சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் இரவில் திடீர் என வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஆந்திராவிலிருந்து வரும் ஆந்திர அரசு பேருந்து தமிழக அரசு பேருந்துகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்தனர். மாவட்டத்தில் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பேர்ணாம்பட்டு, பரதமராமி, கிறிஸ்டியான்பேட்டை முத்தரசிகுப்பம்,உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை சாவடிகளில், தற்போது கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஆந்திராவிலிருந்து கடத்தி வருவதை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து வாகன சோதனை நடக்கிறது.
நேற்று தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து, வாகன சோதனை முடுக்கிவிட்டுள்ளதுடன் ரயில்களிலும் சோதனை செய்கின்றனர். மேலும், போதை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஏற்றும் 81 வங்கி கணக்குகள் இம்மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சோதனைகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கும் பொருட்கள் எடுத்து வருவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீசாருடன் தமிழக போலீசாரும் சேர்ந்து ஆந்திரா, குஜராத் போன்ற தமிழகம் வரும் ரயில்களை சோதனை செய்து, தொடர்ந்து கஞ்சாவை பிடித்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களான வெள்ளி சனி,ஞாயிறு திங்கள் ஆகிய 4 நாட்கள் முழுமையான சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் திடீர் சோதனை நடத்தியது காவல்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.