மாணவியை கேலி, கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருவபவரின் மகன் சந்தோஷ் என்பவர் கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சந்தோஷை மாணவியின் உறவினர்கள் தட்டிக்கேட்டு தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் நேற்று கூட்டாளிகள் 10 பேருடன் சென்று மாணவியின் குடும்பத்தில் உள்ளவர்களை சரமாரியாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படாததை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரியும் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் வேப்பங்குப்பம் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர். பின்னர் சம்பவ இடத்தில் வேலூர் DSP திருநாவுகரசு பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து 3 மணி நேரத்துக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது,
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.