சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நேதாஜிசவுக் பகுதியில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான ரேணுகா என்ற உணவகம் உள்ளது
இந்நிலையில் இன்று காலை நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் குடிபோதையில் தனியார் ஓட்டலில் காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, ஓட்டல் ஊழியரிடம் பூரி ஆர்டர் செய்துள்ளார். மேலும், சூடாகவும், விரைவாகவும் பூரிகேட்டு ஓட்டல் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியர் தனசேகருக்கும், குடிபோதையில் வந்த சந்திரசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும். போதை ஆசாமியை ஹோட்டலில் இருந்து வெளியே அனுப்பி நிலையில், மீண்டும் ஹோட்டலுக்கு வந்த சந்திரசேகர், கையில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலுடன் ஹோட்டல் ஊழியர் தனசேகர் தலைமீது அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது
தகவலறிந்து வந்த குடியாத்தம் போலீசார் தனசேகரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து,
குடிபோதையில் தகராறு செய்த போதை ஆசாமி சந்திரசேகரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.