சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நேதாஜிசவுக் பகுதியில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான ரேணுகா என்ற உணவகம் உள்ளது
இந்நிலையில் இன்று காலை நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் குடிபோதையில் தனியார் ஓட்டலில் காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, ஓட்டல் ஊழியரிடம் பூரி ஆர்டர் செய்துள்ளார். மேலும், சூடாகவும், விரைவாகவும் பூரிகேட்டு ஓட்டல் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியர் தனசேகருக்கும், குடிபோதையில் வந்த சந்திரசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும். போதை ஆசாமியை ஹோட்டலில் இருந்து வெளியே அனுப்பி நிலையில், மீண்டும் ஹோட்டலுக்கு வந்த சந்திரசேகர், கையில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலுடன் ஹோட்டல் ஊழியர் தனசேகர் தலைமீது அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது
தகவலறிந்து வந்த குடியாத்தம் போலீசார் தனசேகரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து,
குடிபோதையில் தகராறு செய்த போதை ஆசாமி சந்திரசேகரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.