ஆளுநரை குறி வைத்து தமிழக முதல்வர், திமுகவும் ஏளனமாகும் ஒருமையிலும் பேசி வருவதாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியதாவது :- திமுக என்ற ஊழல் அராஜகத்தை மேற்கொள்ளும் ஆட்சியில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்கு முன்னால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு செய்துள்ளது.
காவல்துறையும், உளவுத்துறையும் முடங்கிக் கொண்டுள்ளது. ஆளுநரை குறி வைத்து தமிழக முதல்வர், திமுகவும் ஏளனமாகும் ஒருமையிலும் பேசி வருகின்றனர். ஊழலை மறைக்க வேண்டும் என்று செயலில் திமுக ஈடுபடுகிறது.
மத்திய புலனாய்வு அமைப்பு இதில் விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
பாஜகவின் எழுச்சி என்பது 2024 பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். பாரதிய ஜனதா கட்சி இரட்டை இலக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை நிச்சயமாக இம்முறை அனுப்பும். தனித்து நின்றாலும், கூட்டணி என்றாலும் தங்களின் சுய பலத்தோடு வெற்றியை பாஜக பதிவு செய்வோம். நீட் தேர்வில் முட்டையை கையில் வைத்து உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு காட்டுகிறார். அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் தானே தவிர, அவரே விளையாடிக் கொண்டிருக்கிறார்.
திமுக அரசு திட்டமிட்டு இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு வன்முறை ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கலவரத்தில் நடக்கும் உயிரிழப்புகளில் ரத்தத்தை குடித்து, அதன் மூலம் வாக்கு வங்கியை சேகரிக்க திமுக விரும்புகிறது. அதனை பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது.
தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியர்களும், மத, மொழி இனங்களைக் கடந்து பிரதமர் மோடியின் கருத்தை வலுப்படுத்த பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். தமிழகம் தாமரையின் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தும், எனக் கூறினார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.