வேலூர் : பயணிகள் இரயில் மூலம் கஞ்சா கடத்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞரை சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப் புலனாய்வு பிரிவு துறையினர் கைது செய்தனர்.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதை பொருள் கடத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இரயில்கள் மூலம் கஞ்சா கடத்துவதில் முக்கிய பாதையாக இருந்து வருவது காட்பாடி வழித்தடம்.
இந்நிலையில், சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப் புலனாய்வு பிரிவினர் டாடா நகரில் இருந்து காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பொது பெட்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து அவரிடம் இருந்த இரண்டு பைகளை பரிசோதித்தபோது, அதில் எட்டு பொட்டளங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, கடலூர் மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த கபிலன் என்ற அந்த 23 வயது இளைஞரை கைது செய்த சென்னை ரயில்வே குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரிடம் இருந்து சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைதான இளைஞரை காட்பாடியில் உள்ள போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.