திருமண நாளில் குடும்பத்தோடு இருசக்கரவாகனத்தில் கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதி ஈஸ்வரன்-சங்கீதா. திருமணமாகி இரு ஆண்குழந்தைகள் உள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இன்று திருமண நாள் என்பதால் மனைவி சங்கீதா மற்றும் 3 வயது ஆண்குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பச்சயம்மன் ஆலயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, ஆற்காட்டில் இருந்து கலவை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாகும் முன்பு கூட தன் 3 வயது ஆண்குழந்தையை சாலையோர செடி மீது வீசி காப்பாற்றியுள்ளனர். தாய், தந்தை ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
உயிரிழந்த ஈஸ்வரனின் தந்தை வெங்கடேசன், தாய் மற்றும் சித்தப்பா பாலமுருகன், சங்கீதாவின் தாய், தந்தை ஆகியோர் உள்ளதால் அவர்களின் அரவணைப்பில் குழந்தைகள் வளர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.