திருமண நாளில் குடும்பத்தோடு இருசக்கரவாகனத்தில் கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதி ஈஸ்வரன்-சங்கீதா. திருமணமாகி இரு ஆண்குழந்தைகள் உள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இன்று திருமண நாள் என்பதால் மனைவி சங்கீதா மற்றும் 3 வயது ஆண்குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பச்சயம்மன் ஆலயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, ஆற்காட்டில் இருந்து கலவை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாகும் முன்பு கூட தன் 3 வயது ஆண்குழந்தையை சாலையோர செடி மீது வீசி காப்பாற்றியுள்ளனர். தாய், தந்தை ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
உயிரிழந்த ஈஸ்வரனின் தந்தை வெங்கடேசன், தாய் மற்றும் சித்தப்பா பாலமுருகன், சங்கீதாவின் தாய், தந்தை ஆகியோர் உள்ளதால் அவர்களின் அரவணைப்பில் குழந்தைகள் வளர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.