வேலூர் ; தேர்வுக்கு படிக்காததால் பாட்டியின் செல்போனில் இருந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவியின் காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருநகர் பகுதியில் உள்ளது தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து சென்னை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த எண் வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளலார் திரு, ஓல்டு டவுனில் காண்பித்துள்ளது.
உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இப்பகுதியை சேர்ந்த மாணவி கழிஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்து வருவதும், இன்று நடைபெறவிருக்கும் புவியியல் தேர்வுக்கு படிக்காத காரணத்தால் தேர்வு பயத்தில் அவருடைய பாட்டியின் கைபேசியை எடுத்து அவசர எண் 100க்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் வேலூர் மாவட்ட காவல் குழுவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்யும் குழுவினர் விரைந்து சென்று தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.