வேலூர் அருகே புலி குட்டி ரூ.25 லட்சத்திற்கு விற்பனைக்கு இருப்பதாக வாட்ஸ் அப்பில் Status வைத்த சட்டக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் சார்ப்பனாமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர், திருப்பதியில் சட்டம் பயின்று வருகிறார். மேலும், நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வாங்கி, விற்கும் பணியையும் அவர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இவர் புலிகுட்டி விற்பனைக்கு என தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதுவும் ரூ.25 லட்சத்திற்கு என்றும், 10 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வேலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரை பிடித்து வனவிலங்கு பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.