Categories: தமிழகம்

ரயிலில் சீட் பிடிப்பதில் தகராறு… ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது பிளேடால் தாக்குதல் ; சிறுமிகள் உள்பட வடமாநில பெண்களிடம் விசாரணை..!!

வேலூர் அருகே ரயிலில் பொதுபெட்டியில் சீட் பிடிக்கும் தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் ஒரு வாலிபரை பிளேடு மற்றும் நகங்களால் ரத்த காயம் ஏற்படுத்திய 2 சிறுமி உட்பட மூன்று வடமாநில பெண்களிடம் அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்ஜினின் முன்பக்கம் உள்ள பொது பெட்டியில் கூட்ட நெரிசல் இருந்தது. இந்நிலையில், சீட்டில் வாலிபர் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மேலும், துணி மூட்டைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ரயில் காட்பாடி ஸ்டேஷனில் நின்று புறப்படும் போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகர் (58 ) என்பவர் துணி மூட்டைகளை சீட்டுக்கு கீழே வைக்குமாறும், படுத்திருக்கும் வாலிபரை எழுந்து உட்காருமாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சில வாலிபர்களும் சீட்டில் உட்காருவதற்கு இடம் கேட்டுள்ளனர். அப்போது, அந்த பெட்டியில் இருந்த மும்பை புனேவை சேர்ந்த சங்கீதா (44), அவரது மகன் சச்சின், மகள்கள் ஜோதி, ஹேமலதா ஆகியோர் பயணிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகரின் காது பகுதியில் ரத்தம் வழிந்தது. இதில் சேகர் தன்னை வட மாநில பெண்கள் பிளேடு மற்றும் நகங்களால் கீரி உள்ளனர் என்று சக பயணிகளிடம் தெரிவித்தார். மேலும், இன்னொரு வாலிபருக்கும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ரயில் சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி அருகில் வரும்போது பயணிகள் சிலர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். பின்னர் ரயில் அங்கிருந்து 4 நிமிட கால தாமதத்தில் புறப்பட்டது.

இது குறித்து ரயில்வே கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் தயாராக நின்றிருந்தனர். அரக்கோணத்தில் ரயில் வந்து நின்றதும் போலீசார் விசாரணை நடத்தி ஒரு பெண், இரண்டு சிறுமி மற்றும் சச்சின் என்ற வாலிபரை கீழே இறக்கினர். மேலும், பாதிக்கப்பட்ட 2 வாலிபர்களையும் போலீசார் கீழே இறக்கி விசாரித்தனர்.

இந்நிலையில் புனேவை சேர்ந்த சச்சின், போலீஸ் விசாரணையின் போது திடீரென அங்கிருந்து காணாமல் போனார். இதன் காரணமாக ரயில் அரக்கோணத்தில் 15 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் புனேவைச் சேர்ந்த சங்கீதா, அவரது மகள்கள் ஜோதி, ஹேமலதா ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது.

அங்கு பனியன்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக துணி மூட்டைகள் எடுத்து செல்கிறோம். அந்த மூட்டைகள் சீட்டுக்கு கீழே வைத்திருந்த போது தகராறு ஏற்பட்டது. நாங்கள் பிளேடால் கிழிக்கவில்லை. கை நகங்களால் சண்டை போடும்போது கிழித்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகரிடம் புகார் மனு பெற்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

திமுகவைப் பாராட்டிய தேமுதிக.. கூட்டணியில் நடப்பது என்ன? உண்மை இதுதான்!

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…

6 minutes ago

ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?

பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…

47 minutes ago

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…

12 hours ago

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…

13 hours ago

ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…

14 hours ago

சாய் அபயங்கருக்கு அடிச்சது ஜாக்பாட்.. முன்னணி நடிகருடன் இணைகிறார்!

பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…

14 hours ago

This website uses cookies.