வேலூர் அருகே பாதிக்கப்பட்ட நெல் பயிறுக்கு உரிய நிவாரணம் வழங்காததால் நெற்பயிரை விவசாயி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கொண்டாரெட்டியூரை சேர்ந்த விவசாயி சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கரில் விளை நிலத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன் பயிரிட்டப்பட்டிருந்த நெல்பயிற்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக பெய்த மழையினால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக மத்திய அரசின் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தில் 1300 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்துள்ளார்.
ஆனால், பயிர் பாதிக்கப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், இதுவரை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும், உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து இன்று தனது பயிரை தீயிட்டு கொளுத்தினார். மேலும் இனியாவது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“விவசாயி சிவகுமார் செய்துள்ள பயிற்காப்பீட்டு திட்டம் அறுவடை காலத்தில் தான் கணக்கிடப்படும். மேலும், இது வெள்ள பாதிப்பு அல்ல. அவரது காப்பீடு மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். காப்பீட்டு தொகை வர ஓராண்டாவது ஆகும். ஆக சிவகுமாரின் நெல் பாதிப்பு குறித்து கணக்கிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என காட்பாடி வேளாண் உதவி அலுவலர் (அசோக்குமார்) தகவல் தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.