ஒடுக்கத்தூரில் மது அருந்தும் போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ஓங்கப்பாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாபு என்பவரின் மகன் கௌதமன் (19). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், புலிமேடு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (35) என்பவருக்கும் கடந்த ஒரு மாத்திற்கு முன்பாக குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கார்த்திக் மற்றும் கௌதமன் நேற்று ஒன்றாக மது குடிக்க சென்றதாகவும், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், கெளதமனின் அம்மாக்கு போன் செய்த கார்த்தி “உன்னோட மகனை கொலை செய்ய போறேன்,” என்று கூறியுள்ளார்” உடனடியாக கௌதமன் உறவினர்கள் ஓடி வந்து பார்த்த போது கௌதமன் சடலமாக கிடந்துள்ளார்.
மது பாட்டினால் தாக்கி, கத்தியால் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார்.
தகவல் அறிந்த வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து கொலை செய்த கார்த்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.