வேல்முருகன் மீது எதிலும் கை வைக்க முடியாது என நினைத்துக் கொண்டு, தற்போது எனது குடும்ப பிரச்சினையில் வந்து தலையிட்டு வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கனிமவள கொள்ளைக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது ;- அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளுக்கு உதவுவதற்காக தாமிரபரணி ஆற்று தண்ணீரை உறிஞ்சி, அதன் மூலம் பெப்சி. கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசுக்கு செலுத்த வேண்டியதை 1 லிட்டருக்கு 1 பைசா என கொடுத்தால் போதும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, அபின், போதை சாக்லேட் அதுமட்டுமா சர்வதேச அளவில் ஹெராயின் கடத்தல் நடந்து வருகிறது.
லாட்டரி விற்று பணம் சம்பாதிக்க கூடாது. அதேபோன்று கஞ்சா விற்று அந்த பணத்தை சம்பாதிக்க கூடாது. அது மட்டுமா மக்களை குடிகாரர்கள் ஆக்கி அதன் மூலம் பெண்களை விதவைகளாக்கி, அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் சம்பாத்தியம் என்பது இந்த அரசுக்கு தேவையா..? என்னைப் பொருத்தவரை எனக்கென ஒரு வரைமுறை கட்டுப்பாடு ஒழுக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளேன்.
இதையெல்லாம் பார்த்த ஒரு கூட்டம் வேல்முருகன் மீது எதிலும் கை வைக்க முடியாது என நினைத்துக் கொண்டு, தற்போது எனது குடும்ப பிரச்சினையில் வந்து தலையிட்டு வருகிறார்கள். தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனைகளுக்காக இந்த இயக்கம் தொடர்ந்து உழைத்துக் கொண்டு வருகிறது. மண்ணை நேசிக்க, மக்களை நேசிக்க, தமிழ் மொழியை நேசிக்க, தமிழ் விடுதலை நேசிக்க, இந்த இயக்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
தற்போது சினிமா நடிகர்கள் அரசியலுக்கு உலா வரும் காலம் வந்து கொண்டிருக்கிறது. நான் ஒன்றும் சூப்பர் ஸ்டார் அல்ல. உலகநாயகன் அல்ல. சாதாரண முந்திரி காட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான் இந்த வேல்முருகன். எங்கே என தெரியாமல் இருந்த சினிமா,நடிகை நயன்தாராவை செல்போனில் படம் எடுக்க ஒரு கூட்டம் உலவி கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு சினிமா நடிகர்கள் மீதும், நடிகைகள் மீதும் இளைஞர்களுக்கு மோகம் வந்துவிட்டது, என்றும் அவர் பேசினார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.