கன்னியாகுமரி: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி, நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 500க்கும் மேற்பட்ட திரண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிக்கு 48 காலி பணியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்திருந்தது. இதனையொட்டி இன்று முதல் பத்து நாட்கள் நேர்முகத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இத்தேர்வில் கலந்து கலந்து கொள்ள 5906 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று முதல் நாளில் 500க்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வருகை தந்ததால், அந்த சாலை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் வருகை தந்த இளைஞர்கள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கான தேர்வில் சைக்கிள் ஓட்டும் பயிற்சி,கால்நடை மாடு மேய்த்தல் பயிற்சி நடைபெற்றது.
மேலும், தொடர்ந்து 10 நாட்கள் நேர்முக தேர்வு நடைபெறும் எனவும், 5906 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் 48 காலி பணியிடங்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது என மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.