விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் நேற்று இரவு ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா சங்கரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை சூலக்கரை மேடு திருமலை மன்னர் நகர் முதல் தெருவில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர்உமாசங்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
உமாசங்கரின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு முறையான கணக்குகள் காட்டவில்லை. இருப்பினும், நேரடியான புகார் இல்லாததால்அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யயப்பட உள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.