விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் நேற்று இரவு ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா சங்கரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை சூலக்கரை மேடு திருமலை மன்னர் நகர் முதல் தெருவில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர்உமாசங்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
உமாசங்கரின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு முறையான கணக்குகள் காட்டவில்லை. இருப்பினும், நேரடியான புகார் இல்லாததால்அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யயப்பட உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.