ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் இயங்குகிறது. இங்கு உதவி செயற்-பொறியாளராக, ஊரக வளர்ச்சி துறை கோபி அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு கூடுதல் பொறுப்-பாக கவனிக்கிறார்.
கோவையை சேர்ந்த மோகன் பாபு கோபியில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி பணிகளை, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராஜேஸ் தலை-மையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், கடந்த 4ஆம் தேதி மாலை அதிரடி சோதனை நடத்தினர்.
விடிய விடிய நடந்த சோதனையில் 10 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. மோகன் பாபுவிடம் இருந்து, 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மோகன்பாபு மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.