சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட விக்னேஷ் சிவன்…. நயன்தாரா உடனான உறவில் விரிசல்? காரணம் முன்னாள் காதலரா?!!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2022, 6:01 pm
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. இவர்கள் இருவரின் தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமாருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.

படம் வெளியான பின் தங்களது திருமண அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

பொதுவாக எந்த படத்திற்கும் ப்ரோமோஷன் பணிகளில் நயன்தாரா ஈடுபட மாட்டார். ஆனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை பிரபுதேவா அவரது மனைவி இவர்கள் வாழ்க்கையில் மூன்றாவதாக வந்த நயன்தாரா போல கதை பிரதிபலிப்பதாக உள்ளதாக நயன்தாரா கருதியுள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா தம்பதிகளுக்கு இடையே சமந்தா வருவது போல உண்மை கதையை விக்னேஷ் சிவன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. படம் நடிக்கற வரைக்கும் தெரியாத நயன்தாராவுக்க படம் முடித்த பின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலை வைத்து படமாக எடுத்துள்ளதாக புரிந்து கொண்டுள்ளார். இதனால் விக்னேஷ் மற்றும் நயன்தாரா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் கோபமடைந்த நயன்தாரா நான் காத்துவாக்குல 2 காதல் படத்தின் புரமோஷனுக்கு வர மாட்டேன் என கூறியுள்ளார். சொந்த தயாரிப்பாக இருந்தாலும் வரமாட்டேன் என கோபமாக விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார்.
கல்யாணத்திற்காக நிறைய கோயில்களுக்கு சென்று நிறைய பூஜை, பரிகாரங்கள் என செய்து வந்த இவர்களது கல்யாண முடிவு இந்த படத்தால் நின்று விடுமோ என அச்சம் எழுந்துள்ளது.