வாரிசு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாடியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது, அவரது ரசிகர்கள் முதியோர் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக இன்று வெளியான வாரிசு திரைப்படத்தையொட்டியும், பொங்கல் திருநாளையொட்டியும், திருச்சி புதூரில் உள்ள சாந்தி அமைதி முதியோர் இல்லத்தில் ராஜா தலைமையில் “வாரிசு பொங்கல்” கொண்டாடப்பட்டது.
முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து முதியோர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. முன்னதாக, அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு இலவச சேலைகள் வழங்கி வாரிசு பொங்கல் மகிழ்ச்சி அங்கு பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விஜய் ரசிகர்கள் பவுல் சரண்ராஜ், நடராஜன், பிரகாஷ், நசீர், தொட்டி ஹரிகரன், மனச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.