கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் திரை கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் கார்த்திகை , ஸ்ரீ வள்ளி திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இதில் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள வசந்தம் பேலஸ் என்னும் திரையரங்கில் திரைப்படம் துவங்கும் முன்னர் ரசிகர்களின் ஆர்வமிகுதியால் பல்வேறு கொண்டாட்டங்களில் திரை முன்பு ஈடுபட்டனர் .
உற்சாகத்தில் உச்சமாக ஆடிங்கொண்டிருந்த ரசிகர்கள் திரையின் மேல் விழுந்தனர். இதில் திரை கிழிந்தது. பின்னர் படம் முழுவதும் ஓடிய பின்னர் திரை சரி செய்யப்பட்டு காட்சிகள் நடந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, விஷமிகள் சிலர் ரசிகர்கள் போர்வையில் திரையரங்கில் நுழைந்து திரையை கிழித்து இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
This website uses cookies.