தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு மேலும் ஒரு நிர்வாகியை அமைக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: 2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து, கட்சிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இந்த நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, கட்சியின் நிர்வாக வசதிக்காக 234 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுவதாக சமீபத்தில் விஜய் அறிவித்தார். மேலும், இது குறித்து, கடந்த ஜனவரி 24ஆம் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய பட்டியலை விஜய் வெளியிட்டார். மேலும் தொடர்ந்து, மற்ற மாவட்டச் செயலாளர்களின் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணியிலும் தவெக தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே ஒரு பூத்துக்கு ஐந்து முதல் ஏழு கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் மேலும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் உத்தரவிட்டு உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டுகள்.. யூடியூபர்களுக்கு இடையே மோதல்.. சைபர் கிரைம் வரை சென்றது ஏன்?
அதேநேரம், சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களுக்கு நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இப்போதே விழாவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கட்சி தொடங்கி ஓராண்டு முடிவடையும் நிலையில், அன்றைய நாளில், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, கிளை வாரியாக விழாவை சிறப்பாக நடத்தி அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பொதுமக்களை நேரடியாகச் சென்று சேரும் வகையில் நலத்திட்டங்களை அளிக்கும்படி கட்சித் தலைமை ஆர்டர் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.