சென்னை : சென்னையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்து நிதியுதவி வழங்கினர்.
விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர்.
சென்னையில் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட இளம்பெண் ஒருவர், உடலில் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு உதவி செய்யுமாறு, நடிகர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்த அந்தப் பெண், அவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, இது தொடர்பாக நடிகர் விஜய் அந்த பெண்ணுக்கு உதவி செய்யமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, நடிகர் விஜய் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், வரும் 15-ந்தேதிக்குள் விஜய் அந்த பெண்ணை சந்திக்காவிட்டால், வாரிசு திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் வாசலில் நடிகர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழர் முன்னேற்றப் படை கட்சியினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். மேலும் அவருக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.