விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா பொறியியல் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நடிகர் விஜயே தனது கைகளால் சான்றிதழ் மற்றும் ரூ.5000 ஊக்கத்தொகையையும் வழங்கி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
சுமார் 13 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சளிக்காமல் சான்றிதழ்களை வழங்கியது பெரும் பேசு பொருளானது.
இதனிடையே, சில மாணவர்கள் மாவட்டத்திலே அதிக மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும், விஜய் மக்கள் இயக்கம் தங்களை கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று வேதனை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்த மாணவி நேத்ராவும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். இவர் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையிலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் குளறுபடியால் மாணவி நேத்ரா சென்னை அழைத்து வரப்படவில்லை.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதில், விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தூத்துக்குடி மாணவி நேத்ரா தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.