மகளிர் தின வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், முதல் முறையாக திமுக பெயரை வெளிப்படையாகப் பயன்படுத்தியுள்ளார்.
சென்னை: இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எல்லோருக்கும் வணக்கம், இன்று மகளிர் தினம். தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் எனது அம்மா, அக்கா, தங்கை, தோழியாகக் கருதுகிறேன்.
உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே? பாதுகாப்பாக இருக்கும்போதுதானே சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது சந்தோஷம் இருக்காதுதானே.
அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய, நீங்கள், நான் எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவுங்க இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்க மாறக்கூடியதுதானே. மாற்றத்துக்கு உரியதுதானே.
கவலைப்படாதீங்க, இந்த 2026ஆம் ஆண்டு, நீங்க, நான் எல்லோரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுகவை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதியேற்போம். உங்களுடைய எல்லா சூழலிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக நான் உங்களோடு நிற்பேன். நன்றி, வணக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சோறு போட்ட தென்னிந்திய சினிமாவை கண்டபடி விமர்சித்த ஜோதிகா… வலுக்கும் கண்டனம்!
முன்னதாக, விஜய் வெளியிடுவதற்கு சில நேரத்துக்கு முன்பு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பெண்களுக்கான திட்டங்களைக் குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். மேலும், அப்பா என்றும் தன்னை ஸ்டாலின் குறிப்பிட்டு வருவதால், விஜய் இந்த வீடியோவில் அப்பா என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்துள்ளார்.
அதேநேரம், கடந்த ஆண்டு கட்சியைத் தொடங்கிய விஜய், இதுவரை மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வந்தாலும், ஒருமுறை கூட திமுக, பாஜக என பெயரைக் குறிப்பிடவில்லை, முதல் முறையாக மகளிர் தின வாழ்த்தில் தான் திமுக பெயரைப் பயன்படுத்தி உள்ளதால், 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
This website uses cookies.