மதுரை வருமானவரித்துறை சார்பில் வருமானவரி செலுத்துபவர்கள் வருமாவரித்துறை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளும்வகையில் மதுரை தமுக்கம் மைதான அரங்கில் TAXPAYERS HUB என்ற நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சியினை நடிகர் விஜய்சேதுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி : நானும் சில ஆடிட்டர்ஸ் அலுவலகத்தில் வேலைபார்த்திருக்கிறேன், வருமானவரித்துறை செலுத்துபவர்கள் வருமானவரித்துறை தொடர்பாக தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ள யாரை பார்ப்பது என்ற நிலை இருந்தது.
இதையும் படியுங்க: பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ய திமுக கொடிதான் லைசன்சா? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இப்போது எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் இதுபோன்ற இணையதளம் தொடங்கியுள்ளது வரவேற்பு அளிக்கும் வகையில் உள்ளது.
அதிலும் கார்டூன் வடிவில் கொடுத்துள்ளது எளிமையாக சுவாரஸ்யமானது புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
பான்கார்டு அப்ளை பண்ண வேண்டுமானால் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் உள்ளது. இதை நிறைய பேருக்கும் மீண்டும் கடினமாக இருக்கும் தமிழிலும் இருந்தால் அது பார்த்தவுடன் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் நீங்க இதை தொடங்குவதே இது எளிமையாக செல்ல வேண்டும என்ற முயற்சிதான், பிரச்சனை வரும்போது அதுபற்றி முன்னதாகவே விளக்கமும் தெளிவும் வேண்டும்அது நமக்கு புரியும் மொழியில் இருந்தால் தான் தெளிவாக இருக்கமுடியும், இல்லையெனில் மறுபடியும் ஒருத்தரை சார்ந்து இருக்க கூடிய நிலை உருவாகும்.
வருமானவரித்துறையினர் இந்த முயற்சி அற்புதமானது. வருமானவரி செலுத்துவது நமது கடமை அவசியம், நமது உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கிறமோ அதே அளவு வரி செலுத்துவது கடமை, ரொம்பநாள் மனதில் உள்ள விஷயம் இதை சொல்கிறேன் :
கஷ்டபட்டு சம்பாதித்து வரி கட்டுறோம், ஒருகாலத்தில் நல்லா சம்பாதிப்போம், ஒரு காலத்தில் வருமானம் இல்லாமல் போவோம் அப்போது வரிசெலுத்துபவர்களுக்கு சில பயன்கள் கிடைக்க வருமானவரித்துறையினர் வழிவகை செய்ய வேண்டும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.