மதுரை ; விஜய் சேதுபதி படத்தில் நடித்து பிரபலமான மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு தங்கையாகவும், விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்து பிரபலமானாவர் காசம்மாள்.
இவர் உசிலம்பட்டி அருகே உள்ள உள்ள ஆனையூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளி ஆவார். 71 வயதான இவருடன் மூத்த மகன் நமகோடி வசித்து வந்தார். மனைவியுடன் ஏறபட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக தாயுடன் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி, மது அருந்துவதற்கான பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தர மறுத்த நிலையில், கோபமடைந்த நமகோடி தாயை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நமகோடியை கைது செய்தனர்.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.