நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக அவர் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு வில்லன் வேடம் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, விஜய் சேதுபதி நடித்து முடித்து ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை அடுத்து விஜய் சேதுபதி எந்த தமிழ் படத்தில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் யாரை கேட்டாலும் பதில் கிடைக்கவில்லையாம்.
அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி தற்போது முழுக்க முழுக்க பாலிவுட் நடிகராக மாறி வருகிறாராம் . அவர் ஏற்கனவே மும்பைக்கார் எனும் ஹிந்தி படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
அதனை அடுத்து, கத்ரினா கைப் உடன் ஜோடியாக நடிக்க உள்ள மேரி கிறிஸ்த்மஸ் எனும் படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து காந்தி டாக்ஸ் எனும் ஹிந்தி பட ஷூட்டிங்கிலும் தற்போது கலந்து கொண்டுள்ளார். இது போக இன்னும் 2 ஹிந்தி படம் கைவசம் இருக்கிறதாம்.
மேலும், தமிழில் கதை கேட்டால், சிந்துபாத் எடுத்த சு.அருண்குமார்இ மற்றும் சங்கத்தலைவன் எடுத்த விஜய் சந்தர் ஆகியோரும் கால்ஷீட் கேட்டு வருகின்றனராம். ஏற்கனவே நண்பர்களுக்காக என படம் செய்தது எல்லாம் போதும் என முடிவு எடுத்து பாலிவுட் பக்கம் தற்போது தஞ்சம் அடைந்துள்ளாராம்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.