தவெக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 28ல் நடைபெற உள்ள நிலையில், அதில் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு விஜய் பதிலளிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தவெக பொதுக் குழுக் கூட்டம் வருகிற மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனவே, இக்கூட்டத்தில் விஜய் பேசுவாரா, அவ்வாறு பேசினால், சமீபத்தில் விஜயை கடுமையாக விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதில் அளிப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுக் கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025 – வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது.
இதன்படி, வருகிற மார்ச் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் தவெக பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், பொதுக்க்ழு நடைபெறும் இடத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதிதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் விஜய் சந்தித்தார்.
இதையும் படிங்க: தினந்தோறும் கொலை பட்டியல்.. சட்டப்பேரவைக்கு வெளியே வெளுத்துவாங்கிய இபிஎஸ்!
மேலும், தவெக கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியதால், 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததால், அதன் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், 2ம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே, கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். இதற்காக அக்கட்சி 120 மாவட்டங்களாக பிரித்துள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.