விஜயதசமியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் உள்ள சரஸ்வதி கோவிலில் சிறு குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி கற்கும் நிகழ்ச்சி துவக்கம்-இதில் ஏராளமான குழந்தைகளுக்கு நாக்கில் தங்க எழுத்தாணியால் எழுதி வித்யாரம்பம் ஆரம்பம்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலம் தொட்டு ஏடு துவக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. கல்வி கடவுளான சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியான அன்று இரண்டரை வயது முடிந்த குழந்தைகளுக்கு முதன் முதலாக கல்வி போதித்தால் அவர்கள் நன்றாக கல்வி பயின்று வாழ்க்கையில் உன்னத நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.
அதன்படி இன்று விஜயதசமி என்பதால் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனமாலீஸ்வரர் கோவிலில் உள்ள சரஸ்வதி தேவி ஆலயத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு ஏடு எழுதப்பட்டது.
இதில் பச்சரிசியை தாம்பளத்தில் பரப்பி அதில் அகர எழுத்துக்களை எழுதியும் குழந்தையின் நாக்கில் தங்க எழுத்தாணியில் தேன் தடவி அகர எழுத்துக்களை எழுதியும் முதன்முதலாக கல்வி புகட்டப்பட்டது.
இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏடு எழுத அழைத்து வந்தனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.