விஜயகாந்த் முதலமைச்சராக இருந்திருக்க வேண்டியவர்.. கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சிவக்குமார் உருக்கம்!
விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய நடிகர் சிவக்குமார்” இந்த மண் இருக்கும் வரை கேப்டன் விஜயகாந்த்தை யாரும் மறக்க மாட்டோம். வருங்காலத்தில் முதலமைச்சர் ஆகவேண்டிய ஒரு நபர். ஆனால், இன்று விஜயகாந்த் நம்முடன் இல்லை. புதுயுகம் படத்தில் நானும் விஜயகாந்துடன் நடித்தேன்.
கேப்டன் விஜயகாந்த் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு விஷயம் என்னவென்றால், 1996 ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி கலைஞர் அவர்களுக்கு ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை விஜயகாந்த் மட்டுமே தனியாக நின்று செலவு செய்து நடத்தினார்.
அந்த விழாவிற்கு பிறகு அடுத்த தேர்தலில் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆன பிறகு லட்ச கணக்கில் கடன் இருந்தது. கமல் ரஜினி எல்லாம் அந்த சமயம் உயரத்தில் இருந்தார்கள். அவர்களுடைய உயரத்திற்கு விஜயகாந்தும் வளர்ந்தார்.
ஆனால், மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடைய வீட்டிற்கு சென்று மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். கடன்கள் பலவற்றையும் அடைத்தார். இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் நம்மலுடன் இல்லாதது வேதனை” எனவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.