Categories: தமிழகம்

3 ஆயிரம் கொடுத்துடுங்க..- லஞ்சம் வாங்கிய VAO-வை மடக்கிய விஜிலென்ஸ்..!

திருச்சியில் வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூபாய் 3000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார்(40). இவரது மனைவி தேவி. தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகி விட்டார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில் வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.8.2024 அன்று விண்ணப்பம் செய்தார்.

காலமான ரவிச்சந்திரன் வசித்த திருச்சி பீமநகர் பகுதிக்கு உட்பட்ட கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாததால், இதுகுறித்து விபரம் அறிந்துகொள்ள ரத்தினகுமார் கடந்த நேற்று மதியம் ஒரு மணி அளவில் கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கே இருந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார்(50) என்பவரை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு செந்தில் குமார் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு தனக்கும் தனது உயர் அலுவலர்களுக்கும் சேர்த்து மொத்தம் 15,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

ரத்தினகுமார் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறிய காரணத்தால், விஏஓ செந்தில்குமார் உங்களது மனுவை மேல் அனுப்பி விடுகிறேன். அதற்காக எனக்கு மட்டும் தனியாக 3000 கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரத்தினகுமாருக்கு அளித்த ஆலோசனையின் படி இன்று மதியம் 12 மணியளவில் ரத்தினகுமார் செந்தில் குமாரிடம் இருந்து 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் சேவியர் ராணி, பிரசன்னவெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். விஏஓ செந்தில்குமார் முதலில் 15,000 கேட்டது தொடர்பான மேல் விசாரணையை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர் மேற்கு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

16 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

16 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

17 hours ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

18 hours ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

18 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

19 hours ago

This website uses cookies.