மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் அமைந்துள்ள பூம்பாறை கிராமத்தில் இருந்து குண்டு பட்டி, பழம்புத்தூர் செல்லும் முக்கிய சாலைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றன.
சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு முடிய தார் சாலை போட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் உள்ளது. கொடைக்கானலில், உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலுக்கு கொடைக்கானல் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் மற்றும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் முக்கிய கிராமங்களில் ஒன்று.
மேல்மலையிலிருந்து அவசர காலங்களில் இச்சாலையை தான் இரண்டு கிராமங்களுக்கும் முக்கிய சாலையாக விளங்குகின்றது. சாலையின் வழியில் விவசாயிகள் தங்கள் பயிரிட்ட விலைப் பயிர்களை இவ்வழியாக தான் கொண்டு செல்லும் சூழ்நிலையில் உள்ளன.
மேலும், இக்கிராமத்திற்கு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வந்து செல்ல முடியாத பாதையாக மாறிக் கொண்டு வருகிறது. மேலும், இச்சாலையில் 2 முதல் மூன்று அடி பள்ளங்கள் அனேக இடங்களில் காணப்படுகிறது. இரண்டு சக்கர வாகனத்தில், செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் இப்பாதையில், அடிக்கடி கீழே விழுந்து பெருங்காயங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பூம்பாறை ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை கவனத்தில் கொண்டு பல வருடங்களாக பழுதாகி கிடக்கும் சாலையை கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.