கே.ஜி.எப் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் அதன் இரண்டாவது பாகத்தை மேலும் எதிர் நோக்கி காத்திருந்தனர். அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி கே.ஜி.எஃப்-2. பான் – இந்தியா ரிலீஸாக வெளியானது.
இந்திய சினிமாவில் இந்த படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்துவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்றால் எந்த அளவுக்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். தென்னிந்தியா மட்டுமல்ல; வசூல் வேட்டையில் பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை இந்த கே.ஜி.எஃப்- 2. இரண்டாம் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக இதன் அடுத்த பாகத்துக்குத் தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என பலரும் தங்களது கற்பனைக் குதிரையை பறக்கவிட்டு ஏகப்பட்ட கதைகளை சொல்லிவருகின்றனர். கேஜிஎஃப் சீரிஸ்களைப் பொறுத்தவரை யஷ்ஷுக்கு மட்டுமல்லாது அவற்றில் வில்லன்களாக நடிப்போர்க்கும் பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கனமான ரோல்கள் கொடுக்கப்படுகின்றன.
இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் கதாபாத்திரம் அதில் இறந்துபோவதாகக் காட்டப்பட்டது. இதனால் மூன்றாம் பாகத்தில் வில்லனாக நடிக்கவுள்ளது யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 3ஆம் பாகத்தில் வில்லனாக நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிக் கவனம் பெற்றிருந்தார் ராணா. அந்தக் கதாபாத்திரம் உருவாக்கிய தாக்கமே கே.ஜி.எஃப்- 3 படத்தில் அவர் இணைவதற்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.
ஹாலிவுட் லெவலில் இப்படத்தின் ரிலீஸைக் கொண்டு செல்லத் திட்டம் உள்ளதாம். அதனால் ராணா மட்டுமல்லாது சில ஹாலிவுட் நடிகர்களும் இதில் வில்லன்களாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
This website uses cookies.