விழுப்புரம் முத்தாம்பாளையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலை பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்தி சாராய பாக்கெட்டை பிரித்து மதுபிரியர் ஒருவர் மது அருந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் அருகேயுள்ள முத்தாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விழுப்புரம் நகர பகுதிக்கு வர கூடிய பிரிவு சாலையில் பேருந்து நிறுத்தம் மற்றும் வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி சென்னை, விக்கிரவாண்டி, திண்டிவனம், விழுப்புரம் நகர பகுதிக்கு செல்ல தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிறுத்ததை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தம் அருகில் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு அங்கு வருபவர்களிடம் வம்பிழுப்பது, வாகனங்களை மறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள், வாகனஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மது பிரியர் ஒருவர் தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டை பிரித்து சாலையிலையே மது அருந்திவிட்டு அவ்வழியாக வரக்கூடிய அரசு பேருந்தை நிறுத்தி, சாராய பாக்கெட்டினை பிரித்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி மது அருந்தும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால் அவ்வழியாக சென்றவர்கள் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டதால் மது அருந்துவதை அந்த பகுதியில் இருந்த நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.