Categories: தமிழகம்

விழுப்புரம் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பாய்கிறது குண்டர் சட்டம்? அமைச்சர் பொன்முடி தகவல்!!

கஞ்சா போதையில் இரண்டு நபர்களால் கத்தி குத்துப்பட்டு இறந்த பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் என்பவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது தாயாரிடம் வழங்கினார்.

விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த 29ஆம் தேதி மாலை கஞ்சா போதையில் இரண்டு நபர்கள் அங்கு கடையில் இருந்த இப்ராஹிம் என்பவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர் இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து போதையில் இப்ராகிம் என்பவர் குத்தப்பட்டு இறந்த சம்பவத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு தொகையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை விழுப்புரம் வடக்கு தெருவில் உள்ள இப்ராஹிம் இல்லத்திற்குச் சென்ற உயிர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இப்ராஹீம் அவர்களின் தாயார் மேகரணிசாவிடம் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலை மற்றும் நகர திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியும் வழங்கினார்.

உடன் திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, நகர மன்ற தலைவர் சர்க்கரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டு அதனை முதல்வர் கொடுக்க உத்தரவிட்டத்தின் பேரில் இன்று காலை நேரில் வந்து அவரது தாயாரிடம் இரண்டு லட்ச ரூபாய் காசோலையை வழங்கியதாகவும் மேலும் நகர திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியையும் வழங்கி உள்ளதாகவும் முதலமைச்சர் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாகவும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

4 minutes ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

1 hour ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

2 hours ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

2 hours ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

2 hours ago

உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…

3 hours ago

This website uses cookies.