Categories: தமிழகம்

விழுப்புரம் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பாய்கிறது குண்டர் சட்டம்? அமைச்சர் பொன்முடி தகவல்!!

கஞ்சா போதையில் இரண்டு நபர்களால் கத்தி குத்துப்பட்டு இறந்த பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் என்பவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது தாயாரிடம் வழங்கினார்.

விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த 29ஆம் தேதி மாலை கஞ்சா போதையில் இரண்டு நபர்கள் அங்கு கடையில் இருந்த இப்ராஹிம் என்பவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர் இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து போதையில் இப்ராகிம் என்பவர் குத்தப்பட்டு இறந்த சம்பவத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு தொகையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை விழுப்புரம் வடக்கு தெருவில் உள்ள இப்ராஹிம் இல்லத்திற்குச் சென்ற உயிர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இப்ராஹீம் அவர்களின் தாயார் மேகரணிசாவிடம் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலை மற்றும் நகர திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியும் வழங்கினார்.

உடன் திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, நகர மன்ற தலைவர் சர்க்கரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டு அதனை முதல்வர் கொடுக்க உத்தரவிட்டத்தின் பேரில் இன்று காலை நேரில் வந்து அவரது தாயாரிடம் இரண்டு லட்ச ரூபாய் காசோலையை வழங்கியதாகவும் மேலும் நகர திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியையும் வழங்கி உள்ளதாகவும் முதலமைச்சர் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாகவும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

29 minutes ago

வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…

47 minutes ago

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

15 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

16 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

17 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

18 hours ago

This website uses cookies.