விழுப்புரம் ; விழுப்புரம் அருகே பங்காளிக்குள் ஏற்பட்ட விரோதத்தால் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள காப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன். இவர் பாமகவில் மாவட்ட துணை தலைவராக பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பனையபுரத்தில் இருந்து விக்கிரவாண்டி – கும்பகோணம் சாலையில் கப்பியாம்புலியூர்க்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, ஊர்க்கு ஒரு கிலோமீட்டர் முன்பு வழி மடக்கிய 5 பேர் கொண்ட கும்பல், கத்தியால் கழுத்து, மார்பு பகுதியில் குத்தியும், கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இறந்துவிட்டதை உறுதிபடுத்திக்கொண்டு அக்கும்பல் தப்பியுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளானர்.
சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த அவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.
அவருக்கும் (ஆதித்யன்), அதே ஊரைச் சேர்ந்த அவருடைய பங்காளிகளான லட்சுமி நாராயணன் என்பவருக்கும் பொது இடத்தில் மண் எடுப்பதில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக ஆதித்தினை அவருடைய பங்காளிகளே கூலிப்படைகளை ஏவி வெட்டி கொலை செய்துள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட எஸ்.பி ஸ்ரீநாதா கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.