Categories: தமிழகம்

14 அடியில் தேங்காயின் உள்ளே விநாயகர்… மலைக்கோட்டை கோவிலில் பிரமாண்ட கொழுக்கட்டை… பக்தர்களின் கவனம்பெற்ற சதுர்த்தி..!!

தமிழகத்தில் வேறு எங்கும் காணாத வகையில் சேலத்தில் பத்தாயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் நடுவே வடிவமைக்கப்பட்ட 14 அடி உயரத்தில் தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மகா கணபதி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முழுமுதற் கடவுள் விநாயகர் பெருமான் அந்த விநாயகர் பெருமாள் வேண்டியதை வேண்டியபடி தந்தருளும், விநாயகருக்கு ஆண்டுதோறும் பக்தர்களால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இல்லங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ வாசவி கல்யாண மண்டபத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். குறிப்பாக, அமர்நாத் குகையில் விநாயகர் வீற்றிருப்பதை போன்றும் கண்ணாடி மாளிகையில் விநாயகர் அமர்ந்திருப்பதை போன்றும் கைலாயத்தில் கணபதி குடியிருப்பது போன்றும் அவ்வைக்கு மோட்சம் கொடுத்த விநாயகப் பெருமான் போன்றும் தச அவதாரத்தில் விநாயகர் என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 43 வது ஆண்டாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தென்னந்தோப்புகள் அமைக்கப்பட்டு, பத்தாயிரம் தேங்காய்களை கொண்டும் குறிப்பாக 14 அடியில் தேங்காயை உருவாக்கப்பட்டு, தேங்காய் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மஹா கணபதி காட்சி தருவதைப் போல வடிவமைத்திருந்தனர். இந்த தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மஹா கணபதியை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.

இது குறித்து எலைட் அசோசியேசன் நிர்வாகி சுவாதி சேகர் கூறும் போது ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு வடிவங்களில் விநாயகரை வடிவமைக்கிறோம். இந்த ஆண்டு தென்னந்தோப்புக்குள் தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர கணபதியை வடிவமைத்துள்ளோம். இதற்காக கடந்த ஒரு வாரமாக மண்டபத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு மண்டபம் முழுவதும் தென்னந்தோப்பு உருவாக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் நடக்கும் பாதை முதற்கொண்டு விநாயகரை காண செல்லும் வழி முழுவதும் தேங்காய் நார் மற்றும் தேங்காய் துகள்கள் போன்றவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

தேங்காயில் கணபதி இருப்பதை போன்று வடிவப்பதன் நோக்கம் முக்கண்ணின் அம்சமாக இருக்கக்கூடியவர் சிவபெருமான், அவருடைய மகனான கணபதியை தேங்காயில் வடிவமைக்க வேண்டும் என நினைத்து செய்யப்பட்டது என்றும், எந்த சுப காரியங்கள் செய்தாலும் அதற்கு முக்கிய காரணமாக தேங்காய் இருக்கிறது. எனவே தேங்காயை மையமாக வைத்து இந்த வருடம் விநாயகர் வடிவமைக்கப்பட்டது, என தெரிவித்தார். பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் மூன்று நாட்கள் இருக்கும் என்றும் கூறினார்.

இதேபோல, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் பிரம்மாண்டமான கொழுக்கட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ, உச்சி விநாயகர் சன்னதியில் 75 கிலோ 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது..

மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும். இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும். திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் ,மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தன‌காப்பு அலங்காரம் நடைபெறும்.

மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவிஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது.

திருச்சி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

10 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

11 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

11 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

12 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

12 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

12 hours ago

This website uses cookies.