Categories: தமிழகம்

கோவையில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு!!

தமிழகம் முழுவதும் தற்போது இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி அதிக அளவில் பரவி வருகிறது. இது குறித்த தகவலின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 68 நபர்களுக்கு தற்போது காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் 30 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் காய்ச்சல் அறிகுறிக்கு கடந்த சில நாட்களில் பெரும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சுய பாதுகாப்பு ஏற்பாடு ஏற்படுத்திக் கொண்டார்களோ அதே போல தற்போதைய சூழ்நிலையிலும் முக கவசம் கைகளை சுத்தமாக கழுவுதல் சானிடைசர் உபயோகிப்பது இடைவெளிகள் அதிகரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

அதேபோன்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கின்ற காரணத்தினால் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை குழந்தைகள் வயதானவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்றும் கதர் பருத்தி போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று சிங்கப்பூர் விமானத்தில் இருந்து கோவை வந்த நான்கு பயணிகளுக்கு காய்ச்சல் குறித்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய முகவரிகள் வாங்கி தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள் இருப்பதாகவும், மேலும் தற்போது தமிழகத்தில் பரவியுள்ள இன்ஃப்ளுயன்சா ப்ளூ காய்ச்சல் அறிகுறி 13 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு அதிகளவிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் காய்ச்சல் அறிகுறி தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சாதாரணமாகவே பெண்களுக்கு குழந்தைகளை பராமரிப்பது பெரியோர்களை பராமரிப்பது போன்ற காரணங்களினால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது காய்ச்சல் அறிகுறி அதிகரித்திருப்பதாக தெரிவித்து இருப்பார்கள் எனவும்.மேலும் கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்று கோவை அரசு மருத்துவமனை முதல்வர் Dr.A. நிர்மலா தகவல் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

5 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

6 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

7 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

7 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

8 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

8 hours ago

This website uses cookies.