கோவை: சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்த குட்டியானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
கோவை மாவட்டம் சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள 5 மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சாடிவயல் பகுதியிலிருந்து வெள்ளப்பதி நோக்கி அரசுப் பேருந்து சென்ற போது திடீரென வனப்பகுதிக்குள் இருந்துவந்த குட்டியானை ஒன்று பேருந்தை வழிமறித்து பேருந்தை நோக்கி ஓடி வந்தது. இதனால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னால் செலுத்தினார்.
இதனை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சாலைகளை கடக்கும் யானைகள் கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி வந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.