2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது,முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதையும் படியுங்க: ‘எம்புரான்’ படத்திற்கு மோகன்லால் செய்த தியாகம்..தமிழ் நடிகர்கள் தாக்கப்பட்டார்களா.!
இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த போட்டியில்,விராட் கோலி ஒரு முக்கிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளார்.அவர் இன்னும் 38 ரன்கள் அடித்தால்,ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு நான்கு அணிகளுக்கு எதிராக 1000+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்த இருக்கிறார்.
அவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் (1053 ரன்கள்),டெல்லி கேப்பிடல்ஸ் (1057 ரன்கள்),பஞ்சாப் கிங்ஸ் (1030 ரன்கள்) ஆகிய அணிகளுக்கு எதிராக 1000+ ரன்கள் அடித்துள்ளார்.இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 38 ரன்கள் அடித்தால்,இந்த சாதனையை தொடரும் முதல் வீரர் ஆவார்.
மொத்தமாக 252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார்.அவரது சராசரி 38.0 ஆக உள்ளதுடன்,8 சதங்கள்,55 அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 113 ரன்கள் என்ற சாதனையுடன் விளையாடி வருகிறார்.
விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார்.இன்னும் சில ஆண்டுகள் விளையாடினால் 10000+ ஐபிஎல் ரன்கள் அடையும் முதல் வீரர் என்பதோடு,அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரராகவும் சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…
நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை! தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர்…
நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன் தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
மாரடைப்பால் துடித்த தமீம் இக்பால்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தமீம் இக்பால் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில்…
அணியின் பேலன்ஸா? சுயநல முடிவா? ஐபிஎல் 2025 தொடர் மிகவும் பரபரப்பாக தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
This website uses cookies.