இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், கருணாஸ், சூரி, மைனா நந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துயுள்ளது.
விருமன் படத்தில் கார்த்தி கிராமத்து கெட்டப்பில் உள்ளார். இதனிடையே கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் கிராமத்தில் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.விருமன் படத்திற்கு முன் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் தான் கொம்ன். இந்த படத்தினை தொடந்து, மீண்டும் இதே கூட்டணியில் விருமன் படம் உருவாகியுள்ளது
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த பாடலின் ஆரம்பத்தில் கஞ்சா பூ கண்ணால என்று தொடங்குகிறது.
இப்படத்திற்கு ஒருபுறம் வரவேற்பு கிடைத்தாலும் மறுபுறம் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் மற்றும் கொம்பன் படங்களின் சாயலில் இப்படம் இருப்பதாக கூறுகின்றனர். அதிலும் கார்த்தி அதிதி ஷங்கரை ஹே தேனு என கூப்பிடுவது பருத்திவீரன் படத்தில் ஹே முத்தழகு என கூப்பிடுவது போலவே உள்ளது.
அதேபோல் அதிதி ஷங்கரும் பருத்திவீரன் படத்தில் உள்ள பிரியாமணி போலவே தோற்றமளிக்கிறார். மேலும் இந்த பாடலும் ஜெயம் ரவியின் தாஸ் படத்தில் இடம்பெற்ற சக்கப்போடு போட்டாலே என்ற பாடலின் காப்பியாக உள்ளது என நெட்டிசன்கள் வருத்து எடுக்கின்றனர்.
இந்நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோக்கே இந்த நிலைமை என்றால் படம் வெளியான பிறகு என்ன ஆகுமோ என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், விருமன் படம் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.