விருதுநகர் கணபதி மில் பிரிவில் தனியார் பேருந்து மீது பின்புறம் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37). இவரது மனைவி நிதர்ஷா (32). இவர்களுக்கு பிரணவ் ஆதித்யா (8), மற்றும் 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நான்கு நபர் சென்னையில் இருந்து காரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இவர்கள் பயணித்த கார் மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் கணபதி மில் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து தனியார் பேருந்து நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தது.
அப்பொழுது மனோஜ் ஓட்டி வந்த கார் பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் மனோஜ் மற்றும் அவரது மனைவி நிதர்ஷா உயிர் இழந்தனர்.
மேலும் இவர்கள் குழந்தைகள் இருவரும் படுக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பஜார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.