விருதுநகரில் பிறந்த நாளை கொண்டாட பெற்றோர் மறுத்ததால் வெளிநாட்டில் படித்த மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலை விக்னேஷ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவர் விருதுநகரில் மருத்துவமனை மற்றும் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (21) ரஷ்யா அருகே உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள ஜலாலா பாத் பல்கலையில் எம்.பி.பி.எஸ் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த ஜூன் மாத லோகேஷ் விடுமுறையில் விருதுநகருக்கு வந்து உள்ளார். இந்த நிலையில் லோகேஸ் பிறந்த நாளான ஆகஸ்ட் 11ம் தேதியான இன்று சிறப்பாக கொண்டாட வேண்டும் என விரும்பினாராம். அதற்கு பெற்றோர் தரப்பில் எளிமையாக கொண்டாட அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த லோகேஷ் நேற்று இரவு அதிகளவில் தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லோகேஸ் பெற்றோர் லோகேஷை விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு லோகேஸ்க்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவ மாணவர் தற்கொலை குறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.