விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்றிய போது, தந்தை போட்டோவை எடுத்துக் கொண்டு கண்கலங்கி அழுதபடி வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியின் வீடியோ கண்கலங்கச் செய்துள்ளது.
சிவகாசி பேருந்து நிலையம் எதிரே உள்ள பெத்த மரத்து ஊரணியை தூர்வாரி பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்களான 13 வணிக வளாகமும், 2 குடியிருப்பு வீடுகளும் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வீட்டிலிருந்த பள்ளி மாணவி ஒருவர், தனது பள்ளி பை பாட புத்தகங்கள் மற்றும் தனது தந்தையின் போட்டோவை எடுத்துக்கொண்டு கண் கலங்கி அழுதபடி நின்றிருந்தார்.
பெண் போலீசார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பள்ளி மாணவியை வீட்டை விட்டு வெளியேற்றிய காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சோகமான பரிதாபக் காட்சி இணையதளத்தில் பரவியுள்ளது. இது அனைவரின் கல் மனதையும் கரைத்து கலங்கச் செய்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.