விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் ரூ 10,000 லஞ்சம் பெற்ற சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது நண்பரான சோலை என்பவருடைய இடத்தில் பெருநாழியை சேர்ந்த தங்கராஜ் பாண்டியன் என்பவர் கல் நட்டதாகவும்,அக்கல்லை உடைத்ததாக கூறி தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ,சோலை, இராமசாமிபட்டி தங்கமணி , முஸ்டக்குறிச்சியைச் சேர்ந்த அய்யனார் ஆகியோர் மீது தங்கராஜ் பாண்டியன் விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்க எம்.ரெட்டியபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இராமநாதன் ரூ 30,000 பெற்று கொண்டதாகவும், மேலும் பணம் போதவில்லை என கூறி மீண்டும் தங்கமணியிடம் சார்பு ஆய்வாளர் இராமநாதன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வேறு வழியின்றி தங்கமணி விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறைக்கு தகவல் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி இரசாயனம் தடவிய ரூ 10 ஆயிரம் பணத்தை தங்கமணி சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் கொடுக்கும் போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பு ஆய்வாளர் இராமநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பு ஆய்வாளர் இராமநாதனிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறையில் அடைத்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.