நடிகர் விஷால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வேறு தயாரிப்பாளர்களின் படங்கள் என்றால் சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் அவர் தயாரிக்கும் படங்களில் மட்டும் ஒழுங்காக வந்து கலந்து கொள்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.
மேலும் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் விஷால் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சின்னத்தம்பி, பாஞ்சாலங்குறிச்சி, சட்டம் என் கையில் போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கேபி பிலிம்ஸ் பாலு.
இவர் விஷாலை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென இறந்துவிட்டார். மேலும் இப்படத்திற்காக பணம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கே பாலு இறப்புக்கு வந்த விஷால் இவருக்கு ஒரு படம் பண்ணி தர போவதாக கூறினார்.
அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து பாலு குடும்பத்திற்கு உதவ உள்ளதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஷால் இவ்வளவு நன்றி மறவாதவராக தன்னுடைய தயாரிப்பாளர் குடும்பத்திற்கு, அவர் இல்லாத போதும் உதவ முன்வந்தது பாராட்டுக்குரியது எனக் கூறிவந்தனர். ஆனால் விஷால் அந்த மேடையில் பேசியதைத் தவிர அதன் பின்பு எந்த வேலையும் இன்னும் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் 7 கோடியை வாங்கிக் கொண்டு விஷால் இதுவரை படம் பண்ணி தராமல் இழுத்தடிப்பது கே பாலுவின் குடும்பம் விஷால் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த புகார் அடிப்படையில் விரைவில் போலீஸ் விசாரிக்கும் என கூறப்படுகிறது
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.