Categories: தமிழகம்

அடுத்தடுத்து இரண்டு மாவட்டங்களுக்கு விசிட் : தூத்துக்குடியை தொடர்ந்து கன்னியாகுமரியில் ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!!

கன்னியாகுமரி : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி வருகிறார். அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு தூத்துக்குடியில் தங்குகிறார். நாளை காலையிலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு காரில் குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2 மணிக்கு வந்து சேருகிறார். அவரை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட பொறுப்பாளரும், மேயருமான மகேஷ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். 

இதைதொடர்ந்து மாலை 4 மணிக்கு நாகர்கோவில் வெட்டூர்ணிமடம்-பள்ளி விளை சாலை மற்றும் டெரிக் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். 

தொடர்ந்து பேயன்குழி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து சீர மைக்கப்பட்ட கால்வாய் உடைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் குமாரகோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து சீரமைக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.  

பின்னர் மாலை 5 மணிக்கு மதுரை புறப்பட்டு செல்கிறார்.  முதல்-அமைச்சர் வருகையை அடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் வருகை தொடர்பான முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் வருகையை அடுத்து குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தென்மண்டல ஐ.ஜி. அன்பு குமரி மாவட்டம் வந்தார். அவர் மாவட்டம் முழுவதும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற் கொண்டார்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுடன் ஆலோசனை நடத்தினார். முதல் – அமைச்சர் வருகையை அடுத்து குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.முதல்-அமைச்சர் வருகையை அடுத்து நாகர்கோவில் சுற்றுலா மாளிகை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 

முதல்-அமைச்சர் வருகையின்போது குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

36 minutes ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

40 minutes ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

58 minutes ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

2 hours ago

திமுகதான் நம்பர் ஒன்.. அடித்துக் கூறும் அண்ணாமலை.. மறுக்கும் அமைச்சர்.. என்ன நடக்கிறது?

மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…

2 hours ago

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்.. தாயைக் கொன்று தப்பிய தந்தை.. என்ன நடந்தது?

கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…

2 hours ago

This website uses cookies.