தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் சுமார் 94 மாணவ மாணவிகள் படித்து வருகின்றார்கள். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது 6ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் தங்களது வகுப்பறையில் இருந்தனர்.
அப்போது அவர்கள் ஆசிரியரின் மேஜையில் இருந்த சத்து மாத்திரையை சாப்பிட்டனர். சத்து மாத்திரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சர்மிளா, தேகா, அஷிதா, ஷாலினி, ஷிபிநயா ஆகியோர் வாந்தி எடுத்தனர்.
மேலும் அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அங்கிருந்த மாணவிகள் பதற்றம் அடைந்தனர். மயங்கி விழுந்த மாணவிகளை ஆசிரியர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நீலகிரியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளில் ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.